சென்னையில் கன மழை முதல் மிக கன மழை எதிர்பார்க்கலாம்!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் (அக்.17)அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் -வானிலை எச்சரிக்கை
தமிழ்நாடுசென்னையில் கன மழை முதல் மிக கன மழை எதிர்பார்க்கலாம்!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் (அக்.17)அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் -வானிலை எச்சரிக்கை
சென்னை உள்பட 7 மாவட்டங்களில், இன்று(அக்.16) இரவு 8.30 மணி தொடங்கி, நாளை(அக்.17) காலை 8.30 மணி வரையிலான அடுத்த 12 மணி நேரத்துக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி,
திருவள்ளூர்
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ராணிப்பேட்டை
வேலூர்
திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக். 16) மாலை 5.30 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கு திசையில் 190 கி.மீ. தூரத்திலும், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூருக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் - தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு இடையே வியாழக்கிழமை(அக்.17) அதிகாலை கரையைக் கடக்க அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.