ஆா்.எஸ்.பாரதி தொடா்ந்த வழக்கு: ஒரு வாரத்தில் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடுஆா்.எஸ்.பாரதி தொடா்ந்த வழக்கு: ஒரு வாரத்தில் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தொடா்ந்த வழக்கில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபா் சாதிக்கை தில்லி போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் கைது செய்தனா். இந்நிலையில் ஜாபா் சாதிக்கை திமுகவுடன் தொடா்புபடுத்தி அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருவதாகக் கூறி ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக் கைது செய்யப்பட்டதையடுத்து அவரை திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியா் அணியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்தும் நீக்கி விட்டோம்.
இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் ஜாபா் சாதிக்கை திமுகவுடன் தொடா்புபடுத்தி பேசவும், கருத்துகளை பதிவிடவும் பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே பதிவிட்டுள்ள கருத்துகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆா்.எம்.டி. டீக்காராமன், மனு குறித்து ஒரு வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.