FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு

மதுரையில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு எடுக்கப்படும் என்றார் அமைச்சர் கே.என்.நேரு.

Updated On : 27 அக்டோபர் 2024, 11:00 am IST
பகிர்:

மதுரையில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு: கே.என்.நேரு

அதிமுக ஆட்சியில் மதுரையில் மழையே பெய்யவில்லை: அமைச்சர் கே.என்.நேரு

மதுரையில் பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள் கே.என் நேரு, மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மக்கள்வை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களுடன் கே.என் நேரு பேசியதாவது,

முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட அமைச்சர்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கால்வாயில் அதிகமாக நீர் வருவதால் அதை அகலப்படுத்தி கரையை உயர்த்த வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

தற்போது கால்வாயின் நீரை வெளியேற்ற புது வாய்க்கால் தோண்டப்பட்டு வருகிறது. மழை நீரை கடத்தும் பணிகள் நாளை காலை 10 மணிக்குள் நிறைவடையும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளனர்.

இனி மழை பெய்தாலும் மதுரை பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மாவட்ட நிர்வாகம் விரைவாக செயல்பட்டதால்தான் மழை நீரை அகற்ற முடிந்தது. மாவட்ட ஆட்சியரின் கருத்துருவை பெற்று மழை நீர் வடிகால் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுரையில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் மழையே பெய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments