கோப்புப்படம் 
தமிழ்நாடு

கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!

கடற்கரை - வேளச்சேரி மீண்டும் தொடங்கிய பறக்கும் ரயில் சேவை பற்றி...

DIN

சென்னை: தண்டவாளம் அமைக்கும் பணியால் கடந்த ஓராண்டுகாலமாக சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து இயக்கப்பட்ட வேளச்சேரி பறக்கும் ரயில்கள் மீண்டும் கடற்கரையிலிருந்து இன்று காலைமுதல் இயக்கப்பட்டு வருகின்றது.

சென்னை எழும்பூா்-கடற்கரை இடையே இருந்த இரு ரயில் பாதைகளில் புறநகா் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டன. இதனால், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை இயக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை எழும்பூா்-கடற்கரை இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்க முடிவுசெய்யப்பட்டு ரூ.275 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இயக்கப்பட்டன. இதனால், பறக்கும் ரயிலை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினா்.

தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பாதுகாப்பு துறையிடம் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு நிலம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் பணியை முடிக்க தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் இதற்கான தீா்வு காணப்பட்டு பணிகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று காலை முதல் பறக்கும் ரயில்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கியது.

கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 120 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தண்டவாளப் பணி காரணமாக 80 ரயில்களாக குறைக்கப்பட்டன. தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக 90 ரயில்கள் இயக்கப்படுகிறது.

சில பணிகள் முடிந்த பிறகு, மீதமுள்ள 30 ரயில்களுடன் முழுமையான ரயில் சேவை தொடங்கும் எனவும் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரியில் தொடரும் ஆபத்து பயணம் காத்திருப்பில் ஒட்டனூா்- கோட்டையூா் பால அறிவிப்பு!

பேருந்தை மறித்து கிராமமக்கள் போராட்டம்

நாகை நகராட்சியை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்

நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்புக் கூட்டம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

முன்னாள் படை வீரா் நல அலுவலக வாகனம் டிச.30-இல் ஏலம்

SCROLL FOR NEXT