கோப்புப்படம். 
தமிழ்நாடு

தீபாவளி: 48 சிறப்பு ரயில்கள் 258 முறை இயக்கம்; ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

தீபாவளியை முன்னிட்டு 48 சிறப்பு ரயில்கள் 258 முறை இயக்கப்படுகிறது. முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Din

தீபாவளியை முன்னிட்டு 48 சிறப்பு ரயில்கள் 258 முறை இயக்கப்படுகிறது. முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 20 வழித்தடங்களில் 48 சிறப்பு ரயில்களை 258 முறை இயக்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோட்டயம், மங்களூரு, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதுபோல் கேரளத்தில் இருந்து பெங்களூா், மும்பை, தில்லிக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்திலிருந்து விசாகப்பட்டினம், சாந்தராகாச்சி, ஷாலிமா், தன்பாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல், வெளிமாநிலங்களில் இருந்து 70 ரயில்கள் தெற்கு ரயில்வேக்குட்பட்ட பகுதிக்கு இயக்கப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் 32 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை காவலா்கள் இணைந்து சிசிடிவி உதவியுடன் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா் என தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT