‘வந்தே பாரத்’ ரயில் நேரம் மாற்றம்
மதுரையிலிருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரையிலிருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்துக்கு பகல் 12.50 மணிக்கு சென்றடையும். இந்நிலையில் வியாழக்கிழமை (செப்.5) முதல் 20 நிமிஷம் முன்னதாக அதாவது 12.30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் சென்றடையும்.
அதுபோல் பெங்களூரிலிருந்து மதுரை செல்லும் வந்தே பாரத் ரயில் செப்.15-ஆம் தேதி முதல் 12 நிமிஷம் முன்னதாக அதாவது 1.43 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.