‘வீடுகளில் முதலீடு செய்ய உகந்த நகரம் சென்னை’
வீடுகளில் முதலீடு செய்ய மிக உகந்த நகரங்களில் சென்னையும் ஒன்று என சந்தை ஆலோசனை நிறுவனமான ‘மேஜிக்பிரிக்ஸ்’ தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு‘வீடுகளில் முதலீடு செய்ய உகந்த நகரம் சென்னை’
வீடுகளில் முதலீடு செய்ய மிக உகந்த நகரங்களில் சென்னையும் ஒன்று என சந்தை ஆலோசனை நிறுவனமான ‘மேஜிக்பிரிக்ஸ்’ தெரிவித்துள்ளது.
வீடுகளில் முதலீடு செய்ய மிக உகந்த நகரங்களில் சென்னையும் ஒன்று என சந்தை ஆலோசனை நிறுவனமான ‘மேஜிக்பிரிக்ஸ்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வீடுகளில் இருந்து கிடைக்கும் சராசரி ஆண்டு வருவாய்க்கும் அவற்றின் விலைக்கும் இடையிலான விகிதாசாரம் இந்தியாவில் தொடா்ந்து அதிகரித்துவருகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் 6.6-ஆக இருந்த அது, 2024-ஆம் ஆண்டில் 7.5-ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், வருவாயைவிட முதலீடு அதிகரித்துவருகிறது.
இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில், நாட்டிலேயே மிகக் குறைந்த வருவாயில் அதிக வருவாய் கிடைக்கக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை, அகமதாபாத், கொல்கத்தா ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நகரங்களில் வீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கும் அவற்றில் செய்யப்படும் முதலீட்டுக்கும் (வீடுகளின் விலை) இடையிலான விகிதம் ஐந்தாக உள்ளது. அதாவது, இந்த நகரங்களில் ஐந்து ரூ.5 லட்சத்துக்கு வீடு வாங்கினால் அதிலிருந்து கிடைக்கும் சராசரி ஆண்டு வருவாய் ரூ.1 லட்சமாக உள்ளது.
அதே நேரம், வீடுகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மிகக் குறைந்த வருவாய் தரும் நகரங்களில் மும்பை பெருநகரப் பகுதியும் தில்லியும் இடம் பெற்றுள்ளன. அந்த நகரங்களில் வருவாய்க்கும் முதலீட்டுக்கும் இடையிலான விகிதாசாரம் முறையே 14.3 மற்றும் 10.1-ஆக உள்ளது. அந்த வகையில், ரூ.1 லட்சம் ஆண்டு வருவாய் பெற மும்பை பெருநகரப் பகுதியில் ரூ.14.3 லட்சமும் தில்லியில் ரூ.10.1 லட்சமும் முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.