தமிழ்நாடு

சென்னை: 22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்! -தமிழ்நாடு வெதர்மேன்

மதுரை, சென்னையில் பல ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.

DIN

சென்னையிலும் மதுரையிலும் பல ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைக்கிறது.

இந்த நிலையில், சென்னையில்செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2002, செப்டம்பரில் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அதன்பின், சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய்க்கிழமை(செப். 17) 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மதுரையில் நிகழாண்டு செப்டம்பரில்(செப். 17) இதுவரை இல்லாத அளவுக்கு 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ன என்ன வார்த்தைகளோ... ஸ்ரேயா சரண்!

200 டிகிரி கோணத்தில் படம் பார்க்கலாம்! ஸெப்ரானிக்ஸின் புதிய புரொஜெக்டர்!

நினைவோ ஒரு பறவை... பிரியா மணி!

நவம்பர் வானம்... சம்யுக்தா!

தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய 125 இந்தியர்கள்! எண்ணிக்கை 1,500 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT