முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி அருகே பாத்திர வியாபாரி வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே பாத்திர வியாபாரி கொலை செய்யப்பட்டது பற்றி...

Updated On : 20 செப்டம்பர், 2024 at 10:55 AM
சித்திரப் படம் - TNIE
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் பாத்திர வியாபாரி மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி அருகே உள்ள மறவன் மடத்தைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் முருகன் (34). பாத்திர வியாபாரியான இவர் புதுக்கோட்டை பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை காலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், இவரை சாரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Advertisement

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முருகனை கொலை செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.