தமிழ்நாடு

கொளத்தூர் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் - முதல்வர் நேரில் ஆய்வு!

கொளத்தூர் பேரவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்.

DIN

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை, கொளத்தூர் பேரவைத் தொகுதியில் இன்று (செப். 24) பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொண்டார்.

கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட ஜி.கே.எம் காலனியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு துவக்கப் பள்ளி, மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16ஆம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், ஜி.கே.எம் காலனியில் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஏ20 ஏலம்: வரலாறு படைத்த பிரெவிஸ்..! 84 வீரர்கள், ரூ.65 கோடி!

நேபாளத்தில் வன்முறை: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

6 வாரங்களுக்கு பந்துவீச மாட்டேன்: பாட் கம்மின்ஸ்

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம்!

SCROLL FOR NEXT