முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அருகே போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்ததால் மக்கள் நிம்மதி

கொளத்தூர் பகுதியில் போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 7:11 PM
வனப் பகுதியில் உயிரிழந்த சிறுத்தை.
பகிர்:

கொளத்தூர் பகுதியில் போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஒன்றியத்தில் புது வேலமங்கலம், வெள்ளக்கரட்டூர் மற்றும் கருங்கரடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 8ஆம் தேதி முதல் சிறுத்தை ஒன்று கிராமத்தில் நுழைந்து 50 மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடி வந்தது.

இதனிடையே வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று கொளத்தூர் அருகே வனப் பகுதியில் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்தது.

Advertisement

இதனைக் கண்ட கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு செய்தனர். பின்னர் வனப் பகுதியில் தீ வைத்து அடக்கம் செய்தனர்.

ஜார்க்கண்டில் பெரும் ஊழல் நடந்துள்ளது: சிவராஜ்சிங் சௌஹான்

பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. இருப்பினும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.