விவாகரத்து வழக்கு: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராக உத்தரவு!
விவகாரத்து வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் செப். 25-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு தம்பதிக்கு ஒரு மகள் உள்ளாா். கடந்த 12 ஆண்டு திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, இருவருக்கிடையே இருந்த பிரச்னை காரணமாக அண்மைக் காலமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
பின்னா், இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த ஆண்டு ஏப். 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்திருந்தனா். மீண்டும் இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய மனுவை செப். 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அன்றைய தினம் விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டாா். இருவரும் அன்றைய நேரில் ஆஜராகி தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அன்றைய தினம் இந்த விவாகரத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.