தமிழ்நாடு

ராமேசுவரத்துக்கு படிப்படியாக ரயில்கள் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

ராமேசுவரத்துக்கு ஏப்.6 முதல் படிப்படியாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Din

ராமேசுவரத்துக்கு ஏப்.6 முதல் படிப்படியாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மண்டபம் - ராமேசுவரம் இடையே உள்ள பாம்பன் ரயில் பாலம் பழுதடைந்த நிலையில் 2022 முதல் ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவுள்ளாா். அதன்பின், மண்டபம் - ராமேசுவரம் இடையே ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:

பாம்பன் புதிய பாலம் திறந்த பின்பு அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் ராமேசுவரத்துக்கு இயக்கப்படும். சென்னை, திருப்பதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படும் ரயில் ராமேசுவரம் வரை இயக்கப்படும். ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயில், ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில்கள் ஏப்.7-ஆம் தேதி முதல் இயக்கப்படும். அதேபோல், ஓகா, அயோத்தி, பனாரஸ் உள்ளிட்ட வெளிமாநில பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் படிப்படியாக ராமேசுவரம் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT