பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ். 
தமிழ்நாடு

பென்சில் கேட்டதால்தான் அரிவாள் வெட்டு: காவல் துறை தகவல்!

8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக...

DIN

இரு மாணவர்களுக்கு இடையேயான மோதல் விவகாரத்தில் பென்சில் கேட்டதால்தான் அரிவாள் வெட்டுக்குக் காரணம் என்று பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவனை, சக மாணவன் அரிவாளால் வெட்டியது குறித்து பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஏற்கனவே பென்சில் கேட்டதில் ஏற்பட்டதாகக் காரணமாகவே மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 3 இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க சென்ற ஆசிரியருக்கும் லேசான வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நலமுடன் உள்ளனர். மாணவன் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்து அரிவாளைக் கொண்டு வந்துள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! தடுக்கச் சென்ற ஆசிரியர் தாக்கப்பட்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT