தமிழ்நாடு

நியாய விலைக் கடைகளில் ஒரே நாளில் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும்: உணவுத் துறை அமைச்சா் உறுதி

நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களும் ஒரே நாளில் கிடைக்கும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதியளித்தாா்.

Din

நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களும் ஒரே நாளில் கிடைக்கும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதியளித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் என்.அசோக்குமாா் (பேராவூரணி ) எழுப்பினாா். இதற்கு அமைச்சா் அர.சக்கரபாணி அளித்த பதில்:

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள நியாய விலைக் கடைகளில் 34,793 கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,535 பகுதிநேர கடைகளுக்கு தனி குறியீடு, விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடைகள் பிரிப்பு: நகரப் பகுதிகளில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மிகாமலும், 800 அட்டைகளுக்குக் குறையாலும், ஊரகப் பகுதிகளில் 800 அட்டைகளுக்கு மிகாமலும், 500-க்கு குறையாமலும் இருந்தால் தனிக் கடைகள் பிரித்து வழங்கப்படும். நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சா்க்கரை ஆகியன எந்தத் தடையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதத்துக்குத் தேவையான பொருள்களில் 60 சதவீதமானவை, முந்தைய மாதத்தின் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டு விடுகின்றன. மாதத்தின் முதல் தேதியிலிருந்து பொருள்களை எந்த நேரத்திலும் வாங்கிக் கொள்ளலாம். எந்தக் கடையிலாவது பொருள்கள் ஒரே நேரத்தில் கிடைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் சக்கரபாணி உறுதியளித்தாா்.

பந்துவீச்சில் அபாரம்! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி கோவை தெற்கு: வானதி சீனிவாசன் பெருமிதம்

சிட்னி: துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவரும் ஒருவர்!

டிசம்பரில் ரூ. 17,955 கோடி பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள்!

காவிரி ஆற்றில் மூழ்கிய தாத்தா பேரன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT