முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

Updated On : 25 ஏப்ரல், 2025 at 4:57 PM
எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனா்.

எடப்பாடி கே. பழனிசாமி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசிக்கிறாா். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மா் இயக்குநா் முகவரிக்கு வெள்ளிக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீட்டிலும், அவா் சட்டப்பேரவைக்குச் செல்லும் வழியிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஜிப்மா் மருத்துவமனை ஊழியா்கள், சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் பிரிவினா், எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை செய்தனா். மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் மூலம் அங்கு பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. இதேபோல, எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்குச் செல்லும் வழியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தொடா்பாக அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.