வெடிகுண்டு மிரட்டல்: அம்பாலா நீதிமன்ற வளாகத்தில் சோதனை
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அம்பாலா நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அம்பாலா நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஹரியாணா மாநிலம், அம்பாலா மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மிரட்டலைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள், வெடிகுண்டு செயலிழப்புப் படைகள் மற்றும் பிற சிறப்புப் பிரிவுகள் உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டதாக அம்பாலா நகர காவல் நிலைய அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்தார்.
சோதனையின் போது சந்தேகத்திற்குரிய எதுவும் மீட்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார். மிரட்டல் காரணமாக நீதிமன்றத்தில் பார்வையாளர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அடையாள அட்டை இல்லாமல் நீதிமன்றத்திற்குள் நுழைய மறுக்கப்பட்டது. முன்னதாக திங்கள்கிழமை, மூன்று பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
Advertisement
Advertisement
கடந்த மாதம், அம்பாலா கண்டோனில் உள்ள இரண்டு மற்றும் அம்பாலா நகரில் உள்ள மற்றொன்று என மூன்று பள்ளிகளுக்கும் இதேபோன்ற மிரட்டல்கள் வந்தன. இதற்கு முன்பு, அம்பாலா துணை ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. கடந்த மாதம் நடந்த இந்த இரண்டு சம்பவங்களிலும், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் அதிகாரிகள் அவை புரளி என்று உறுதிப்படுத்தினர்.
Searches were conducted at the Ambala district court complex on Friday after a court official received a bomb threat via email, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.