FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 19 ஜூன் 2026, 1:54 am IST
கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா்.
பகிர்:

கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல், மகளிா் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன. வழக்கம்போல வியாழக்கிழமை காலை நீதிமன்றங்கள் செயல்பட்டன.

இந்நிலையில், காலை 10.25 மணிக்கு கோவை மாவட்ட நீதிமன்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மா்ம நபா் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, நீதிமன்ற ஊழியா்கள் ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா் நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா். நீதிமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், கழிப்பிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் கருவிகள் மூலமாக சோதனையிட்டனா்.

Advertisement

Advertisement

இதில் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments