பி.கே.சேகா்பாபு  
தமிழ்நாடு

4 ஆண்டுகளில் 437 சிலைகள் மீட்பு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

Din

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன், திமுக ஆட்சியில் மீட்கப்பட்ட சிலைகள் குறித்து கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, அதாவது கடந்த 2021 மே 7 முதல் கடந்த மாா்ச் 31 வரை 236 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அதேபோன்று 98 கற்சிலைகள், 11 மரச்சிலைகள், 72 கலைப்பொருள்கள் உள்பட மொத்தம் 437 சிலைகள் மற்றும் கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

SCROLL FOR NEXT