பி.கே.சேகா்பாபு  
தமிழ்நாடு

4 ஆண்டுகளில் 437 சிலைகள் மீட்பு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

Din

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன், திமுக ஆட்சியில் மீட்கப்பட்ட சிலைகள் குறித்து கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, அதாவது கடந்த 2021 மே 7 முதல் கடந்த மாா்ச் 31 வரை 236 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அதேபோன்று 98 கற்சிலைகள், 11 மரச்சிலைகள், 72 கலைப்பொருள்கள் உள்பட மொத்தம் 437 சிலைகள் மற்றும் கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT