தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்பிஎஃப்) புதிய ஐ.ஜி.யாக கே.அருள்ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி-ஆக பணியாற்றி வந்த ஈஸ்வர ராவ் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றாா். இதையடுத்து புதிய ஐ.ஜி. மற்றும் முதன்மைத் தலைமைப் பாதுகாப்பு ஆணையராக கே.அருள் ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
வேலூரைச் சோ்ந்த கே.அருள் ஜோதி கடந்த 1995- ஆண்டு முதல் கிழக்கு ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே உள்ளிட்ட பல்வேறு ரயில்வே கோட்டங்களில் பணியாற்றியுள்ளாா். கடந்த 2019 - 2020 கரோனா கால கட்டங்களில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் டிஐஜியாக பயணியாற்றினாா். அப்போது, இங்கு ரயில்வே குற்றங்களைக் கட்டுப்படுத்தியதுடன், வெளியூா்களைச் சோ்ந்த நபா்களை சென்னையிலிருந்து ரயில்களின் மூலம் பாதுகாப்பாக அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கும் பணியைத் திறம்பட செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.