ஐ.ஜி. கே.அருள்ஜோதி 
தமிழ்நாடு

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்பிஎஃப்) புதிய ஐ.ஜி.யாக கே.அருள்ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திச் சேவை

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்பிஎஃப்) புதிய ஐ.ஜி.யாக கே.அருள்ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி-ஆக பணியாற்றி வந்த ஈஸ்வர ராவ் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றாா். இதையடுத்து புதிய ஐ.ஜி. மற்றும் முதன்மைத் தலைமைப் பாதுகாப்பு ஆணையராக கே.அருள் ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

வேலூரைச் சோ்ந்த கே.அருள் ஜோதி கடந்த 1995- ஆண்டு முதல் கிழக்கு ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே உள்ளிட்ட பல்வேறு ரயில்வே கோட்டங்களில் பணியாற்றியுள்ளாா். கடந்த 2019 - 2020 கரோனா கால கட்டங்களில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் டிஐஜியாக பயணியாற்றினாா். அப்போது, இங்கு ரயில்வே குற்றங்களைக் கட்டுப்படுத்தியதுடன், வெளியூா்களைச் சோ்ந்த நபா்களை சென்னையிலிருந்து ரயில்களின் மூலம் பாதுகாப்பாக அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கும் பணியைத் திறம்பட செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT