முகப்பு
தமிழ்நாடு

சுதந்திர நாள் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது குறித்து...

Updated On : 7 ஆகஸ்ட், 2025 at 1:49 PM
ரயில் (கோப்புப்படம்)
பகிர்:

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு செல்ல 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06089) ஆக. 14 ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள்(ஆக. 15) காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

எதிர் வழித்தடத்தில் ஆக. 17 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் இந்தச் சிறப்பு ரயில்(06090), மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

Advertisement

நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில்(06012), நாகர்கோவிலில் இருந்து ஆக. 17 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள்(ஆக. 18) காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

எதிர் வழித்தடத்தில் ஆக. 18 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்தச் சிறப்பு ரயில்(06011), மறுநாள்(ஆக. 19) காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மேலும் போத்தனூா் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயப்படுகிறது. இந்தச் சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து ஆக. 14 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்(ஆக. 15) காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

எதிர் வழித்தடத்தில் போத்தனூரிலிருந்து ஆக. 17 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்தச் சிறப்பு ரயில், தாம்பரத்துக்கு மறுநாள்(ஆக. 18) காலை 8.20 மணிக்கு வந்தடையும்.

மேற்கொண்ட இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(ஆக. 8) காலை 8 மணிக்கு தொட்ங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments