சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்த பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் குண்டடிப்பட்டு நலம் பெற்ற டாக்டா் ஏ.பரமேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினா். உடன், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், முன 
தமிழ்நாடு

பஹல்காம் தாக்குதல்: மீண்டு வந்தவா் முதல்வருக்கு நன்றி

பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஏ.பரமேஸ்வரன் குண்டடிப்பட்டு புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது மருத்துவம் மற்றும் பிற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்கும்”என்று முதல்வா் உறுதியளித்தாா்.

இதையடுத்து சிகிச்சையின் காரணமாக நலம் பெற்று இல்லம் திரும்பிய ஏ.பரமேஸ்வரன், அவரது குடும்பத்தாருடன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

இந்த நிகழ்வின்போது திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், அமைச்சா் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், செய்தி தொடா்பு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு!

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

SCROLL FOR NEXT