முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பகல் 1 மணி வரை மழை எச்சரிக்கை பற்றி...

Updated On : 12 ஆகஸ்ட், 2025 at 5:27 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு முதல் சில பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், பகல் 1 மணிவரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், அரியலூர், பெரம்பலூர், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Chennai Meteorological Department said on Tuesday that there is a possibility of rain in 17 districts in Tamil Nadu for the next 2 hours.

முழு கட்டுரையைப் படிக்க →