ரயில் கோப்புப் படம்
தமிழ்நாடு

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா வரும் ஆக. 14 -ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் விமர்சையாக நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணியில் முக்கிய விழாவான ஆடிக் கிருத்திகை 14 -ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி 18- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அரக்கோணம் - திருத்தணி - அரக்கோணம் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 சிறப்புகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 10. 20 மணி, பிற்பகல் 1 மணி, பிற்பகல் 2.50 மணி என 3 சேவைகள் இயக்கப்படும்.

அதேபோல் திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10.50 மணி, பிற்பகல் 1.30 மணி, பிற்பகல் 3.20 மணி என 3 சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Southern Railway has announced that special trains will be operated between Arakkonam and Tiruttani for 5 days from tomorrow (Aug. 14) to Aug. 18 on the occasion of Aadi Krithika.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் தனியாா் பள்ளியில் மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு! தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல் துறை!

வாகனம் மோதி காயமடைந்த புள்ளி மான்

உழவா்கரை தொகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட பூமி பூஜை

திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை

SCROLL FOR NEXT