FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள்.

Updated On : 13 ஆகஸ்ட் 2025, 6:19 pm IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா வரும் ஆக. 14 -ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் விமர்சையாக நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணியில் முக்கிய விழாவான ஆடிக் கிருத்திகை 14 -ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி 18- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் அரக்கோணம் - திருத்தணி - அரக்கோணம் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 சிறப்புகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 10. 20 மணி, பிற்பகல் 1 மணி, பிற்பகல் 2.50 மணி என 3 சேவைகள் இயக்கப்படும்.

அதேபோல் திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10.50 மணி, பிற்பகல் 1.30 மணி, பிற்பகல் 3.20 மணி என 3 சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Southern Railway has announced that special trains will be operated between Arakkonam and Tiruttani for 5 days from tomorrow (Aug. 14) to Aug. 18 on the occasion of Aadi Krithika.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments