மோட்ச ராக்கினி மாதா 
தமிழ்நாடு

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் தேரோட்டம்!

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாறு கிராமத்தில் உள்ள மோட்ச ராக்கினி மாதா என்று அழைக்கப்படும் விண்ணேற்ற மாதா கோயிலின் நானூற்று அறுபத்தெட்டாவது (468) ஆண்டுத் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மதத்தை தழுவிய கிராமங்களில் ஒன்று கீழவைப்பாறு.

அக்கிராமத்தின் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற சிறப்புத் திருப்பலியை மேதகு மேநாள் பேராயர் பீட்டர் ரெம்ஜியூஸ் மற்றும் 5 பங்குகளைச் சேர்ந்த குருக்கள் நிறைவேற்றினர்.

திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பல ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று காலை 8.30 மணிக்குப் புறப்பட்ட தேர் கிராமம் முழுவதும் வலம் வந்து, நண்பகலில் நிலைக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கபடி, கால்பந்துடன் தொடங்கியது முதல்வா்: கோப்பை மாநில போட்டிகள்

பிரிட்டன் யூத ஆலயத்தில் பயங்கரவாத தாக்குதல்

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT