முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)  
தமிழ்நாடு

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டியிருந்தாா். இந்த நிலையில், அவரது கருத்தைக் குறிப்பிடாமல், எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டில் கல்வியில் பெண்கள் முன்னேறி வருவதுடன், அதிகமான பணியாளா்களைக் கொண்ட மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. திறனுடைய வகையிலும், குற்றங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவை பாரபட்சமற்ற வகையில் இருப்பதால், குற்றங்கள் மற்றும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதுடன், பெண்களும் பாதுகாப்பாக இருக்கின்றனா்.

பெண்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கும் வகையில் அதற்கேற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில், விடியல் பயணத் திட்டம், மகளிா் உரிமைத் தொகை, புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை என்று பதிவிட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் பலன்தராத போக்குவரத்து வாரவிழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடரும் விதிமீறல்; கண்டுகொள்ளுமா காவல்துறை?

செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும்- மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

அவிநாசி அரசுக் கல்லூரியில் 316 மாணவா்களுக்கு மடிக்கணினி

இன்று தொடங்குகிறது யு-19 உலகக் கோப்பை

கடையநல்லூா் நகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீா்: நகா்மன்றத் தலைவரிடம் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT