முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 17 ஆகஸ்ட், 2025 at 11:12 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

summary

Rain chance for 16 districts of tamilnadu

முழு கட்டுரையைப் படிக்க →