முகப்பு
தமிழ்நாடு

தவெக மாநாடு: பணியில் 200 செவிலியர்கள் உள்பட 600 மருத்துவக் குழுவினர்!

மதுரை தவெக மாநாட்டுத் திடலில் மருத்துவ உதவி ஏற்பாடுகள் பற்றி...

Updated On : 21 ஆகஸ்ட், 2025 at 4:18 AM
தவெக மாநாட்டுத் திடலில் செவிலியர்கள்
பகிர்:

மதுரை தவெக மாநாட்டுத் திடலில் அவசர மருத்துவ உதவிக்காக 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்பட 600 மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் இன்று (ஆக.21) மாலை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதற்காக அப்பகுதியில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை கருதி அவசர மருத்துவ உதவிக்காக மாநாடு நடைபெறும் இடத்தில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடிப்படை மருத்துவ வசதிகளுடன் 600 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் இருந்தும் மருத்துவக் குழுவினரை அழைத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

summary

More than 200 nurses and medical team have been deployed to provide emergency medical assistance at the Madurai TVK conference.

முழு கட்டுரையைப் படிக்க →