FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு விஜய் வருகை தந்துள்ளார்.

Updated On : 21 ஆகஸ்ட் 2025, 3:55 pm IST
தவெக மாநாட்டு மேடையில் விஜய்.
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு அந்தக் கட்சியின் விஜய் வருகை தந்துள்ளார்.

மாநாடு மாலைக்கு மேல் துவங்கும் என்று கூறி இருந்த நிலையில், சென்னை, கோவை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று இரவே தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவியத் துவங்கினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சரியாக பிற்பகல் 3 மணிக்கு நாட்டுப்புற இசையுடன் தொடங்கியது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொண்டர்கள் உற்சாகத்துடன் கேட்டு ஆரவாரம் செய்து நடனமாடினர்.

இந்த நிலையில், ஆரவாரத்துக்கு மத்தியில் தொண்டர்களை நோக்கி இருகரம் கூப்பி விஜய் வணக்கம் செலுத்தி, பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில்(ராம்ப்) மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். அவர் வரும்போது, விஜய்யின் குரலில் தவெகவின் கொள்கைப் பாடல் ஒளிபரப்பு செய்யப்படது.

தவெக கட்சியின் துண்டை தலையில் கட்டி, ராம்ப் வாக்கில் ஈடுபட்டார் விஜய். தடுப்புகளைத் தாண்டி தொண்டர்கள், விஜய்க்கு அளித்த மாலையை, அவர்களுக்கு திருப்பி அளித்தார் தவெக தலைவர் விஜய்.

தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய், தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தவெக கட்சிக் கொடியினை விஜய் ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகி வாசித்த உறுதிமொழியை விஜய் ஏற்றார்.

summary

Vijay of the Tvk has arrived at the party's political conference stage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments