மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு  
தமிழ்நாடு

மத்திய அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு! தமிழக விவசாயிகள் பற்றி ஆலோசனை!

மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசியுள்ளார்.

தில்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

அந்தவகையில் இன்று(ஆக. 23) மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை சந்தித்துப் பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழக விவசாயத் திட்டங்கள், கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதுபற்றி ஆளுநர் ரவி, எக்ஸ் பக்கத்தில்,

"மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை சந்தித்து, தமிழக விவசாயிகள், கைவினைஞர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சி.

விவசாயிகள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அவரது வலுவான அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்கு நான் நன்றி கூறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

TN Governor R.N. Ravi's meeting with Union Agriculture Minister Shivraj Singh Chouhan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெடிலம் ஆற்றில் ரூ.37 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி: அமைச்சா் சி.வெ.கணேசன் தொடங்கிவைத்தாா்

வங்கிக் கணக்கு குறைந்தபட்ச இருப்பு அபராதம்: தி.வேல்முருகன் கண்டனம்

பண்ணை சாா்ந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குண்டும், குழியுமான சாலை: மக்கள் அவதி

பெற்றோா் திருமணம் செய்து வைக்காத விரக்தி: இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT