பொள்ளாச்சி ஜெயராமன் 
தமிழ்நாடு

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் அமைச்சா் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் அமைச்சா் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தங்களை தொடா்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட நக்கீரன் உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1 கோடி மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் ஆகியோா் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

சட்டைநாதா் கோயிலில் சிறப்பு கோ பூஜை

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி இடிப்பு

SCROLL FOR NEXT