தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கா் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
தமிழக காவல் துறையின் தற்போதைய நிலை குறித்தான 40 பக்க ரகசிய அறிக்கையை வெங்கடராமனிடம் சங்கா் ஜிவால் வழங்கினாா்.
அந்த அறிக்கையில் சங்கா் ஜிவால், கடந்த இரு ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காவல் துறையில் புதிதாக அமல்படுத்தப்பட்ட திட்டங்கள், அவற்றின் நிலை, தமிழக காவல் துறையில் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேவையான திட்டங்கள் ஆகியவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.