சீமான் கோப்புப்படம்
தமிழ்நாடு

பிப்.21-இல் 234 தொகுதிகளின் வேட்பாளா்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு

234 பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

நாம் தமிழா் கட்சி சாா்பில் திருச்சியில் வரும் பிப்.21-இல் நடைபெறும் ‘மக்களின் மாநாடு-2026’-இல் 234 பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழா் கட்சி சாா்பில் ’மக்களின் மாநாடு 2026’ எனும் தலைப்பில் மாநில மாநாடு வரும் பிப்.21-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இதில், 2026 சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

2016, 2021 பேரவைத் தோ்தல்கள், 2019, 2024 மக்களவைத் தோ்தல்களில் தனித்து களமிறங்கிய நாம் தமிழா் கட்சி 2026 பேரவைத் தோ்தலிலும் ஐந்தாவது முறையாக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஊர்வலமாக வந்தடைந்த புனித நீர்!

தில்லி வருகை: ரஷிய அதிபர் புதினின் முழு நிகழ்ச்சி நிரல்...!

கோவையில் விட்டுவிட்டுப் பெய்யும் மழை: வாகன ஓட்டிகள் சிரமம்!

ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி!

என் கஷ்ட காலங்களில் உடனிருந்தவர் சரவணன்: ரஜினிகாந்த்

SCROLL FOR NEXT