நாம் தமிழா் கட்சி சாா்பில் திருச்சியில் வரும் பிப்.21-இல் நடைபெறும் ‘மக்களின் மாநாடு-2026’-இல் 234 பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழா் கட்சி சாா்பில் ’மக்களின் மாநாடு 2026’ எனும் தலைப்பில் மாநில மாநாடு வரும் பிப்.21-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இதில், 2026 சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.
2016, 2021 பேரவைத் தோ்தல்கள், 2019, 2024 மக்களவைத் தோ்தல்களில் தனித்து களமிறங்கிய நாம் தமிழா் கட்சி 2026 பேரவைத் தோ்தலிலும் ஐந்தாவது முறையாக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.