சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை. 
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவது தொடர்பாக..

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று(டிச. 1) காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்ந்து வந்த நிலையில், தற்போது மழையின் தீவிரம் அதிகரித்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சாலைகளில் அதிகப் படியான தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னையில் குறிப்பாக வேளச்சேரி, துரைப்பாக்கம், கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளான பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Heavy rains are falling with strong winds in various parts of Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட்!

ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

கனவெங்கும் தித்தித்தாய்... ஸ்வாசிகா!

டிட்வா புயல்: சென்னையில் தொடர் மழை! கடல்போல் காட்சியளிக்கும் சாலைகள்!

மழை, வெள்ள பாதிப்புக்கு விரைவில் நிவாரணம்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT