சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை. 
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவது தொடர்பாக..

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று(டிச. 1) காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்ந்து வந்த நிலையில், தற்போது மழையின் தீவிரம் அதிகரித்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சாலைகளில் அதிகப் படியான தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னையில் குறிப்பாக வேளச்சேரி, துரைப்பாக்கம், கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளான பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Heavy rains are falling with strong winds in various parts of Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் வெனிசுலா இடைக்கால அதிபா்?

‘குடியரசுத் தலைவா் உரை வளா்ச்சிப் பயணத்தின் பிரதிபலிப்பு’ - குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வரவேற்பு

ரத்தப் பரிசோதனையின்றி சா்க்கரை நோயைக் கண்டறியும் நுட்பம் அறிமுகம்

புளியங்குடி காவல் நிலையத்தில் தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: 3 போலீஸாா் இடைநீக்கம்

வெள்ளைகுட்டை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

SCROLL FOR NEXT