சென்னை: சென்னையில் தொடர்ந்து காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிட்வா புயலானது வங்கக் கடலில் சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில், ஈக்காட்டுக்தாங்கல், கிண்டி, வேளச்சேரி, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதுவரை, இயல்பை விட வடகிழக்கு பருவமழை 8 சதவீதம் கூடுதலாக பதிவாகயுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இயல்பாக அக். 1 முதல் நவ. 30 வரை 35 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு இயல்பவை 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்யும் என்றும், தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.