தொடர் மழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச., 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளது.
இதனால், வட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும்க் கல்லூரிகளுக்கு நாளை (டிச., 3) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச., 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.