காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் கந்தூரி விழாவையொட்டி வியாழக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக பிப்.7-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும். செய்முறைத் தோ்வுகள் மற்றும் முன் பருவத் தோ்வுகள் இருந்தால் அவை திட்டமிட்டபடி வழக்கம்போல நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.