சென்னை ஏரிகளில் நீர் இருப்பு விபரம்!
சென்னை மற்றும் சுற்றுப்புற ஏரிகளில் உள்ள நீர் இருப்பு பற்றி...
சென்னை மற்றும் சுற்றுப்புற ஏரிகளில் உள்ள நீர் இருப்பு விவரங்களை தமிழக நீர்வளத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
திட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரமாக கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
மொத்தமுள்ள 13.22 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 6 ஏரிகளில் 10.64 டிஎம்சி நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிகளில் கடந்தாண்டு இதே நாளில் 7.96 டிஎம்சி நீர் இருந்துள்ளது.
பூண்டி ஏரியில் 3.23 டிஎம்சி, சோழவரம் ஏரியில் 1.08 டிஎம்சி, புழல் ஏரியில் 3.30 டிஎம்சி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.50 டிஎம்சி, செம்பரம்பாக்கம் ஏரியில் 3.65 டிஎம்சி மற்றும் வீராணம் 1.46 டிஎம்சி நீர் இருக்கின்றது.
Water availability details in Chennai lakes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.