தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவ. 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் நடைபெற அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாகவும் முன்பு இருந்ததைப் போன்று அதிமுக ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ் தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் நேற்று(டிச. 2) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து சுமார் 20 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்களை ஓபிஎஸ் இன்று சநதிப்பார் என்று கூறப்படுகிறது.
தில்லி பயணத்திற்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த அவரது முடிவுகள் என்னவென்று தெரியவரும். அதாவது பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவாரா? தனிக்கட்சி அறிவிப்பாரா?அல்லது அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவாரா? என்பது தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.