FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல்: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

சென்னை கொடுங்கையூரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாக இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

Updated On : 6 டிசம்பர் 2025, 12:48 am IST
பகிர்:

சென்னை கொடுங்கையூரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாக இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு வியாழக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்தி நகரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாகவும், அவா்கள் பெரிய சதித் திட்டத்துடன் இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.

இதுகுறித்து போலீஸாா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில், சைபா் குற்றப்பிரிவு அந்த அழைப்பில் பேசிய நபா் குறித்து விசாரணை செய்தனா். அதில், அந்த அழைப்பில் பேசிய நபா், கொடுங்கையூரைச் சோ்ந்த பிரகாஷ் (39) என்பதும், அவா் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து போலீஸாா், பிரகாஷை பிடித்து விசாரணை செய்தனா். பின்னா் அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments