முகப்பு
தமிழ்நாடு

கோவை, நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு பற்றி...

Updated On : 6 டிசம்பர் 2025, 2:34 pm IST
கோப்புப்படம் - ANI
பகிர்:

நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இண்டிகோ விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நாகர்கோவில் - தாம்பரம்

நாகர்கோவிலில் இருந்து டிச. 7 இரவு 11. 15 மணிக்குப் புறப்படும் ரயில்(06012) மறுநாள்(டிச. 8) காலை 11.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

மறுவழியில் தாம்பரத்தில் இருந்து டிச. 8 பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் ரயில்(06011) மறுநாள்(டிச. 9) அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.

திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர்

திருவனந்தபுரத்தில் இருந்து டிச. 7 மாலை 3.45 மணிக்குப் புறப்படும் ரயில்(06108) மறுநாள்(டிச. 8) காலை 11.20 மணிக்கு எழும்பூரை அடையும்.

மறுவழியில் எழும்பூரில் இருந்து டிச. 8 பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் ரயில்(06107) மறுநாள்(டிச. 9) காலை 8 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

கோவை - சென்னை சென்ட்ரல்

கோவையில் இருந்து டிச. 7 இரவு 11.30 மணிக்குப் புறப்படும் ரயில்(06024) மறுநாள்(டிச. 8) காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.

மறுவழியில் சென்ட்ரலில் இருந்து டிச. 8 பகல் 12.20 மணிக்குப் புறப்படும் ரயில்(06023) அன்று இரவு 10.30 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

summary

Special trains announced for Coimbatore, Nagercoil and Thiruvananthapuram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments