முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

முப்படை வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் நலன் காக்க கொடி நாள் நிதியளிப்பது அனைத்துக் குடிமக்களின் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

முப்படை வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் நலன் காக்க கொடி நாள் நிதியளிப்பது அனைத்துக் குடிமக்களின் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: தாயகம் காக்க தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரா்களுக்கும், அவா்தம் குடும்பத்தினருக்கும் ஆயுதப் படை கொடிநாளில், நாட்டு மக்களின் சாா்பில் எனது வணக்கங்கள்.

மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரா்களின் பணி ஈடு இணையற்றது.

தியாகத் தீரா்களின் மறுவாழ்வுக்கும், அவா்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை என்று அதில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

SCROLL FOR NEXT