சென்னை, வடதமிழகத்தில் குளிர் அலை உருவாகும். 
தமிழ்நாடு

சென்னை, வடதமிழகத்தில் குளிர் அலை உருவாகும்! எப்படி இருக்கப்போகிறது?

சென்னை உள்பட வடதமிழகத்தில் குளிர் அலை உருவாகவுள்ளது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

வரும் டிச. 12 ஆம் தேதி உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுறுவல் காரணமாக சிறிய குளிர் அலைகள் உருவாகவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை குறித்த தகவல்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீன் ஜான் தெரிவித்திருப்பதாவது:

”வரும் டிச. 12 ஆம் தேதி உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுறுவல் ஏற்படும். இதனால் மத்திய இந்தியா முழுவதும் சிறிய குளிர் அலைகள் போன்ற சூழலை உருவாக்கும். இதன் தாக்கம் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும், வடதமிழகத்திலும் உணரப்படும்.

பெங்களூரு மற்றும் ஓசூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10-12 டிகிரி செல்சியஸாக குறைந்து காணப்படும். இந்தச் சமயத்தில் உதகை, கொடைக்கானலில், 5 டிகிரி செல்சியஸுக்கு கீழே செல்ல வாய்ப்புள்ளது.

வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வறண்ட மற்றும் குளிரான வானிலை நிலவும்.

டிசம்பர் மாத வானிலையானது, மேற்கு கடற்கரை நகரப்பகுதியில், இயல்புக்கு மாறாக அதிக வெப்பம் நிலவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu Weatherman Pradeep John has said that minor cold waves will develop on Dec. 12 due to the intrusion of high-pressure dry air.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபிஷேக் சர்மாவின் விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியம்: மார்க்ரம்

கோவா களிப்பு... ஷ்ரத்தா தாஸ்!

உங்களுக்குப் பிடித்தது எது?.... ராஷி சிங்!

நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய், அதிக சம்பளம் கேட்ட சிவாஜி... ரஜினி பகிர்ந்த படையப்பா பட அனுபவங்கள்!

மதுரையில் Simbu! நாளை தொடங்கும் அரசன் ஷூட்டிங்!

SCROLL FOR NEXT