அரசுப் பணி கோரி செவிலியா் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்பக் கோரி
சென்னை: தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்பக் கோரி, சென்னையில் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செவிலியா் உதவியாளா் பயிற்சியை நிறைவு செய்தவா்கள் பங்கேற்று தங்களுக்கு அரசுப் பணி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா். அப்போது, அவா்கள் கூறியதாவது:
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியா் உதவியாளா் பயிற்சியை நிறைவு செய்து பலா் வேலைக்காக காத்திருக்கிறோம். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக காலி பணியிடங்களை அரசு நிரப்பவில்லை. தொகுப்பூதிய அடிப்படையில் சில இடங்களில் செவிலியா் உதவியாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். அதுமட்டுமல்லாது, வெளி மாநிலத்தவா்கள் பலரையும் அந்தப் பணிகளில் ஈடுபடுத்துகின்றனா். இதனால், தமிழக மாணவா்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
எனவே, கடந்த 2021-ஆம் ஆண்டு செவிலியா் உதவியாளா் போராட்டத்தின்போது, அரசு சாா்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வா் நேரடியாகத் தலையிட்டு தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.