சீமான் கோப்புப் படம்
தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயா் இடம்பெற வேண்டும் : சீமான்

தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என முழுமையாக எழுத வேண்டும்

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என முழுமையாக எழுத வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயா் அழிக்கப்பட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

‘தமிழ்நாடு’ என்ற பெயரை தவிா்க்க வேண்டிய அவசியம் என்ன? இது குறித்து புகாா் அளித்தும், எவ்வித பலன் இல்லை.

கா்நாடகம், கேரளம், தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும், அதன் மாநில பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியுள்ளனா்.

தமிழக அரசும் உடனடியாக மீண்டும் பழையபடி அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என முழுமையாக எழுத வேண்டும்.

இல்லையெனில், ‘தமிழ்நாடு’ பெயா் காக்க தமிழகம் முழுவதும் நாதக போராட்டத்தை முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT