கள்ளக்குறிச்சி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக கள்ளக்குறிச்சி செல்லும் முதல்வர் ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சி: வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நாளை(டிச. 26) செல்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்று, அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
வீரசோழபுரத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஆட்சியரகக் கட்டடத்தை திறந்துவைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து வீரசோழபுரத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.
Advertisement
Advertisement
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதியத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி கள்ளக்குறிச்சியில் நாளை(டிச. 25), நாளை மறுநாள்(டிச. 26) ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Chief Minister Stalin is traveling to Kallakurichi to attend a government function.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.