உங்களுடன் விவாதிப்பதற்கெல்லாம் நேரமில்லை: இபிஎஸ் சவாலை விமர்சித்த கனிமொழி எம்.பி.
எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்துக் கொண்டிருக்க முதல்வருக்கு நேரமில்லை என்று எம்.பி. கனிமொழி விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்துக் கொண்டிருக்க முதல்வருக்கு நேரமில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களுடன் கனிமொழி பேசுகையில் "ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யாரென்று நமக்கு நன்றாகத் தெரியும். ஸ்டிக்கர் ஒட்டி, உலகம் முழுவதும் பெருமை பெற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி.
முதல்வருக்கு இருக்கிற வேலைப் பளுவுக்கிடையே, இவருடனெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. கட்சியில் எத்தனையோ இருப்பார்கள், அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி விவாதித்துக் கொள்ளட்டும். அதையும் மீறி, கேள்விகள் இருந்தால் முதல்வர் பதிலளிப்பார்" என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
தன்னுடன் நேருக்கு நேர் மேடையேறி விவாதிக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமியின் சவாலை விமர்சித்து கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.
முன்னதாக, பேரவையில் முதல்வரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வெளிநடப்பு செய்பவர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்திருந்தார்.
CM Stalin don't time to debate with EPS: Kanimozhi criticizes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.