FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜன.1 முதல் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 28 டிசம்பர் 2025, 4:56 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு(NTES) செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

• சென்னை - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு (12631) பழைய நேரம் இரவு 08:40, புதிய நேரம் இரவு 08:50.

Advertisement

Advertisement

• சென்னை - திருச்சி சோழன் அதிவிரைவு (22675) பழைய நேரம் காலை 07:45, புதிய நேரம் காலை 08:00.

• சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127 ) பழைய நேரம் காலை 10:20 , புதிய நேரம் காலை 10:40.

• சென்னை - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு(12661) பழைய நேரம் இரவு 08:10 மணி, புதிய நேரம் இரவு 07:35.

• சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(16751) பழைய நேரம் இரவு 07:15 மணி, புதிய நேரம் இரவு 08:35.

• சென்னை - தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு(12693) பழைய நேரம் இரவு 07:30, புதிய நேரம் இரவு 07:15.

• சென்னை - மதுரை வைகை அதிவிரைவு(12635) பழைய நேரம் பிற்பகல் 01:45, புதிய நேரம் பிற்பகல் 01:15.

• சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத்(20665) பழைய நேரம் பிற்பகல் 02:45, புதிய நேரம் மாலை 03:05.

• சென்னை -ராமேஸ்வரம் சேது அதிவிரைவு(22661) பழைய நேரம் மாலை 05:45, புதிய நேரம் மாலை 05:55.

எனவே, பயணிகள் அனைவரும் புதிய அட்டவணை முறையை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை தொடர்வது சிறந்தவையாகும்.

summary

The timetable of several express trains, including the Pothigai and Cholan, departing from Chennai Egmore has been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments