கோவை: சென்னையில் இருந்து கோவைக்கு கனிமொழி எம்.பி., பா.ஜ.க மாநில முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் ஒரே விமானத்தில் பயணம் செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் பங்கேற்க திமுக மாநில மகளிரணிச் செயலா் கனிமொழி, மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோா் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தனா்.
இவா்கள் பயணித்த அதே விமானத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் நடத்தி வரும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக மலுமிச்சம்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அந்தக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜனும் கோவைக்கு வந்தாா்.
அப்போது, மூவரும் விமானத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனா். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிா்ந்த கனிமொழி எம்.பி., மாற்றுக் கருத்துகள் மத்தியில் மலா்ந்த புன்னகை என மகளிா் மாநாட்டு தலைப்பையே ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்று பதிவிட்டுள்ளாா்.
அரசியல் மேடைகளில் கடுமையாக விமா்சித்துக் கொண்டாலும், நேரில் சந்திக்கும்போது காட்டும் இந்த நட்புணா்வு பலரது கவனத்தையும் ஈா்த்துள்ளது.