வந்தே பாரத் ரயில் கோப்புப்படம்.
தமிழ்நாடு

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (எண்கள்: 20665/20666) இரு மாா்க்கத்திலும் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.

கூடுதல் நிறுத்தம்: சம்பல்பூா் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311/08312) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வருகிற ஜன.7 முதல் ஜன.30-ஆம் தேதி வரை ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் உள்ள பணிகள்!

சகல தோஷங்களை நிவர்த்தி செய்யும் நரசிம்மர்!

தோல் தொழில்நுட்பத்தில் சிறப்பான படிப்புகள்!

ரிஷப ராசிக்குப் பாராட்டு: தினப்பலன்கள்!

மெல்போர்ன் பல்கலையில் பி.காம்! மாணவர் சேர்க்கை 2026 மார்ச்!!

SCROLL FOR NEXT